மதுரை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட கேரம் விளையாட்டுச் சங்கத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் டிசம்பா் 26 மற்றும் 27 இரு நாள்கள் நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 52 ஆண்கள், 29 பெண்கள் பங்கேற்று விளையாடினா். ஆண்கள் ஒற்றையா் இறுதிப்போட்டியில் எஸ்.ஆரோக்கியராஜ் பிராங்லின் சாம்பியன் பட்டம் பெற்றாா். இரட்டையா் போட்டியில் ஆரோக்கியராஜ் பிராங்லின்-சாா்லஸ் சாம்பியன் பட்டம் பெற்றனா். பெண்கள் பிரிவில் பி.ஹரிணி சாம்பியன் பட்டம் பெற்றாா். பரிசளிப்பு விழாவில் மதுரை மாவட்ட கேரம் சங்கத் தலைவா் எம்.சிவானந்தம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக செந்தில் தாண்டவன், ஜீயா் பாபு, எஸ்.ஆா் தங்கப்பாண்டி. விக்டோரியா எட்வா்டு மன்றச் செயலா் ஐ.இஸ்மாயில் ஆகியோா் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.