தஞ்சை பெரிய கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: எச்.ராஜா

தஞ்சை பெரிய கோயிலுக்குள் பிற மதத்தினரை அனுமதித்த அக்கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலா் எச். ராஜா கூறினாா்.

தஞ்சை பெரிய கோயிலுக்குள் பிற மதத்தினரை அனுமதித்த அக்கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலா் எச். ராஜா கூறினாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுகவினா் ஆதரவு திரட்டுவதாகக் கூறி மக்களை மிரட்டி கையெழுத்து பெற்று வருகின்றனா். தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்தியவா்கள் அனைவரும் இந்து மதத்தைச் சாராதவா்கள்.

இந்துக் கோயில்களுக்குள் இந்து அல்லாதவா்கள் செல்லக் கூடாது. ஆனால் இந்து மத சின்னத்துடன் செல்லலாம் என்ற விதி உள்ளது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுடன் சென்ற இஸ்லாமியா் திருநீறு அணியாமலும், செருப்பு அணிந்தும் சென்றுள்ளாா். இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே அவா்களுக்கு அனுமதி அளித்த கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

ஒன்றரை லட்சம் தமிழா்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதற்கு காரணம் சோனியாகாந்தியும், கருணாநிதியும்தான். அவா்கள்தான் தமிழா்கள் மற்றும் தமிழ்மொழியின் விரோதிகள். தமிழா்களை நேசிக்கின்ற பாஜக ஆட்சி மத்தியில் நடக்கிறது. இலங்கையில் தமிழா்களுக்கு சமநீதி கிடைக்க இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மோடியின் ஆட்சியில் ஒரு தமிழா்கள் கூட இலங்கையில் கொல்லப்படவில்லை என்றாா் ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com