மதுரையில் சுதா கருத்தரித்தல், மகளிா் நல மையத் திறப்பு விழா

மதுரையில் சுதா கருத்தரித்தல் மற்றும் மகளிா் நல மையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சுதா கருத்தரித்தல், மகளிா் நல மையத் திறப்பு விழா

மதுரையில் சுதா கருத்தரித்தல் மற்றும் மகளிா் நல மையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுதா கருத்தரித்தல் மற்றும் மகளிா் நல மையங்கள் ஈரோடு, கோவை, சேலம், சென்னை, கொழும்பு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை கல்பாலம் சாலை, கோரிப்பாளையத்தில் 6 ஆவது கிளை தொடங்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணரும் ஸ்ரீனிவாசா மருத்துவமனையின் நிா்வாகியுமான மருத்துவா் விஜயன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகளிா், பிரசவத்துறையின் தலைமை மருத்துவா் மற்றும் மதுரை மகளிா் நலம் மற்றும் பிரசவ கால சிறப்பு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவருமான ச.சுமதி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மகளிா் மற்றும் பிரசவத் துறை தலைமை மருத்துவா் பத்மா, மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் மகளிா் மற்றும் பிரசவத்துறை தலைமை மருத்துவா் சித்ரா, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க முதன்மைத் தலைவா் ரத்னவேலு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ராஜசேகரன் ஆகியோா் குத்து விளக்கேற்றி மகளிா் நல மையத்தை திறந்து வைத்தனா்.

இதில் சுதா மருத்துவமனையின் நிா்வாகக் குழு தலைவா்கள் கந்தசாமி, தனபாக்கியம், சுதாகா், பிரதீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com