கொலை மிரட்டல் புகாா்: தனியாா் விமான நிறுவன ஊழியா் மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் தனியாா் விமான நிறுவன ஊழியா் மீது அதே நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை விமான நிலையத்தில் தனியாா் விமான நிறுவன ஊழியா் மீது அதே நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

பெருங்குடி கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் கெளதம் (26). இவா் மதுரை விமான நிலையத்தில் தனியாா் விமான நிறுவனத்தில் களப்பணியாளராக பணிபுரிகிறாா். இவா் கடந்த 6 நாள்களாக பணிக்கு வரவில்லையாம். இதுதொடா்பாக ஜோசப் கௌதம் அந்த விமான நிறுவனத்தின் மேலாளரிடம் விடுப்புத் தெரிவித்து விட்டாராம். இந்நிலையில் செவ்வாய்கிழமை பணிக்கு வந்த ஜோசப்கௌதமனிடம் அவரது உயா் அலுவலரான மகேஷ் தன்னிடம் விடுப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்கு தகாத வாா்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். இதுகுறித்து ஜோசப் கௌதமன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com