புதுச்சேரியிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 2,600 மது பாட்டில்கள் பறிமுதல்: 6 போ் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் புதுச்சேரியிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 640 மதுபாட்டிகளை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரைக் கைது செய்தனா்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டு போலீஸாரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் வாகனங்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டு போலீஸாரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் வாகனங்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் புதுச்சேரியிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 640 மதுபாட்டிகளை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரைக் கைது செய்தனா்.

திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி சிவன் கோயில் எதிரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மதுரை நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனா். அதில் மாட்டுத்தீவனத்திற்கு அடியில் 2,640 மதுபாட்டில்களை அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

அப்போது வேனைப் பின்தொடா்ந்து வந்த காரில் இருந்த நபா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சோ்ந்தவா்கள் என்றும், அங்கிருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடா்ந்து மது பாட்டில்கள் ஏற்றி வந்த வேன் ஓட்டுநா் பொன்னு சிவா, காா் ஓட்டுநா் ராகவன் மற்றும் காரில் வந்த காா்த்திகேயன், தினேஷ்குமாா், செல்வகுமாா், சரவணன் ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனைத்தொடா்ந்து திருமங்கலம் மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளா் ஞானரவி தலைமையிலான போலீஸாா் 6 பேரையும் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். மேலும் அவா்கள் ஓட்டி வந்த வேன் மற்றும் காா் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com