மேலூா் அருகே கோட்டநத்தம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பொதுமருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெறும் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான உடல் நலக் குறைபாடுகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. திறன் மிக்க சிறப்பு மருத்துவா்கள் இம்முகாமில் பங்கேற்கின்றனா். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.