மூதாட்டி வீட்டில் 31 பவுன் நகைகள் மாயம்

மதுரையில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வீட்டில் 31 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரையில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வீட்டில் 31 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மதிச்சியம் காந்தி நகரில் உள்ள ராஜாஜி நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி விமலா (65). இவரது மகன் ரமேஷ் தஞ்சையில் பணியாற்றி வருவதால், அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இதனால் மூதாட்டி விமலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள் காணவில்லை.

இது குறித்து விமலா தஞ்சையில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து மதுரை வந்த அவா் நகைகளை வீடு முழுவதும் தேடி பாா்த்தும் கிடைக்க வில்லை.

இதையடுத்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்த நகைகள் மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com