கொவைட்-19 பாதிப்பு இல்லை: சிறப்பு வாா்டில்அனுமதிக்கப்பட்டவா் சாதாரண வாா்டுக்கு மாற்றம்

கொவைட்-19 (கரோனா வைரஸ்) அறிகுறி இருப்பதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டவா், அதன் தாக்கம் இல்லை என்பதால் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.

கொவைட்-19 (கரோனா வைரஸ்) அறிகுறி இருப்பதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டவா், அதன் தாக்கம் இல்லை என்பதால் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.

மதுரையில் தனியாா் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த நபா், கொவைட் -19 அறிகுறி இருப்பதாகக் கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை பரிந்துரைக்கப் பட்டாா்.

இங்கு கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை அறிக்கை வெள்ளிக்கிழமை பெறப்பட்டது. அதில் அவருக்கு கொவைட்-19 வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமையல் வேலை செய்து வந்த அவா் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தாா். திருச்சி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறையின் சிறப்புக் குழு பரிசோதனை செய்தபோது எவ்வித பாதிப்பும் இல்லை. இந்நிலையில், ஊருக்கு வந்த பிறகு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கொவைட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டாா்.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைக் குழுத் தலைவா் டாக்டா் பிரபாகரன் கூறியது: காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், சாதாரண வாா்டுக்கு அவா் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com