மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், ஊழியா்கள் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் சமத்துவ பொங்கல் வைத்து சூரிய வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் ஊழியா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி, உதவி மருத்துவா்கள் தனசேகரன், ஜலானி பாட்ஷா, தங்கபாண்டியன், முத்துலட்சுமி, சித்த மருத்துவா் இந்திரா தேவி, மருந்தாளுநா் உமா மகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.