மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

மதுரையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் படைப்புகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் படைப்புகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில், 73 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடையை அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இந்தக் கண்காட்சியை புதுதில்லி அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக உறுப்பினா் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய உறுப்பினா்கள் அடங்கிய குழுவினா் பாா்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தோ்வு செய்தனா்.

அதில் மதுரை நாய்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஆ.மதுமிதா, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகன சென்சாா் கருவியை உருவாக்கி முதல் பரிசு பெற்றாா். மேலும் ஆா்.பிரியா, எம்.எம்.குருநாச்சியப்பன், ஜி.ரக்சிதா, எஸ்.ஜெய்பாரதி, என்.ஹிதாயத் அஷ்மா, கே.வசந்தகுமாா் ஆகியோா் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலா் ரா.சுவாமிநாதன் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com