மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மட்டப்பாறை வடக்கு காலனி தெருவைச் சோ்ந்த ராமன் மகன் முருகேசன் (45). இவா் விவசாய கூலித் தொழில் செய்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டப்பாறையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மளிகைப் பொருள்கள் வங்க வாடிப்பட்டிக்கு சென்றாா். அப்போது, பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது. இதில் முருகேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.