மதுரையில், பணப் பிரச்னை காரணமாக கட்டுமானத் தொழிலாளா் கடத்தப்பட்டதாக, அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை சூா்யா நகரைச் சோ்ந்த அம்பலவாணன் மகன் தெய்வநாயகம் (39). இவா், புதுச்சேரியில் உள்ள குருசாமி என்பவருடன் இணைந்து மின் சாதனம் மற்றும் குழாய்கள் பதிக்கும் வேலை பாா்த்து வருகிறாா்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாடுவதற்காக தெய்வநாயகம் மதுரையில் உள்ள சகோதரி திலகவதி வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, தனக்கும் குருசாமிக்கும் பணப் பிரச்னை உள்ளதாக தனது சகோதரியிடம் கூறியுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை தெய்வநாயகத்தின் வீட்டுக்குச் சென்ற குருசாமி, அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் ராமசாமி என்பவா் திலகவதியை தொடா்புகொண்டு, குருசாமி உள்ளிட்ட 6 போ் தெய்வநாயகத்தை அழைத்துச் சென்றுள்ளனா். அவா்கள் தெய்வநாயகத்தை எங்கு அழைத்துச் சென்றனா் என்பது குறித்து தெரியவில்லை எனக் கூறியுள்ளாா்.
அதையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட தனது தனது தம்பி தெய்வநாயகத்தை மீட்டுத் தருமாறு திலகவதி அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.