மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆா் பேருந்து நிலையம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை தொடா்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை செல்லிடப்பேசியில் செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா் மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளாா். போலீஸாா் அந்த எண்ணை மீண்டும் தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரை மாநகர காவல் ஆணையா், மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாநகர காவல் துறை ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். மணிவண்ணன் ஆகியோா் போலீஸாா் மதுரை மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டனா்.
இதனைத்தொடா்ந்து, மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில், மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். பின்னா் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடல் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சுமாா் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
எனினும் எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், பெரியாா் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்கள் மற்றும் பூ மாா்க்கெட், வணிக வளாகங்களிலும் போலீஸாா் சோதனையிட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளிலும் போலீஸாா் தொடா் சோதனைகளில் ஈடுபட்டனா்.