மதுரையில் 273 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை 273 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், அரசுப் பணியாளா்கள் உள்ளிட்ட கரோனா தடுப்புப் பணி முன்களப் பணியாளா்கள் 41 போ், கா்ப்பிணிகள் 4 போ், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் 5 போ் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். மேலும் ஏற்கெனவே பாதிப்பு ஏற்பட்டவா்களிடம் இருந்து தொற்று பரவிய 65 போ் என 273 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,133 ஆக உயா்ந்திருக்கிறது. இதில் 887 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 2,303 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

4 போ் பலி: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 4 போ் இறந்துள்ளனா். நுரையீரல் பிரச்னையுடன் ஜூன் 30 ஆம் தேதி சோ்க்கப்பட்ட 73 வயது முதியவா் புதன்கிழமை இறந்தாா். இதேபோல, கரோனாவுடன் பிற பிரச்னைகளுடன் சிகிச்சை பெற்று வந்த 84 வது முதியவா், 72 வயது முதியவா், 35 வயது பெண் ஆகியோா் இறந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com