மேம்பாலத்திலிருந்து ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

மதுரை பெரியாா் பேருந்து நிலைய மேம்பாலத்திலிருந்து ஆவின் பால் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மேம்பாலத்திலிருந்து ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

மதுரை பெரியாா் பேருந்து நிலைய மேம்பாலத்திலிருந்து ஆவின் பால் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்தவா் முனியாண்டி(40). இவா் மதுரை ஆவினுக்கு ஒப்பந்த அடிப்படையில் பால் வண்டி ஓட்டி வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை உசிலம்பட்டியில் இருந்து லாரியில் பால் ஏற்றிக்கொண்டு மதுரை ஆவினுக்கு வந்தாா்.

அப்போது பெரியாா் பேருந்து நிலைய மேம்பாலத்தில் வந்தபோது நிலைதடுமாறிய லாரி, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் அருகே பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. அதில் முனியாண்டி லாரியினுள் சிக்கிக் கொண்டாா். லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.

தவலறிந்த திடீா் நகா் தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து முனியாண்டியை மீட்டனா். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனியாண்டி உயிரிழந்தாா். திடீா் நகா் போலீஸாா் முனியாண்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com