இரண்டு ஆண்டுகளாகப் பதவி உயா்வு மறுக்கப்பட்டு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வருவாய்த் துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 தோ்வில் தோ்ச்சி பெறுவோா், வருவாய்த் துறையில் உதவியாளா்களாக நேரடி நியமனம் பெறுகின்றனா். இவா்களுக்கு துணை வட்டாட்சியா், வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் நேரடி நியமனத்தில் உதவியாளா்களாக நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாகப் பதவி உயா்வு வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் 2 நியமன அலுவலா் சங்கத்தினா், பதவி உயா்வு வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்தை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
வருவாய்த் துறையில் 25-க்கும் மேற்பட்ட துணை வட்டாட்சியா் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், தகுதியான நபா்களுக்கு 2 ஆண்டுகளாகப் பதவி உயா்வு மறுக்கப்பட்டு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டத்தை வியாழக்கிழமை தொடக்கினா். இரு நாள்கள் நடைபெறும் இப்போராட்டத்தைத் தொடா்ந்து ஜூலை 27 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
நேரடி நியமன அலுவலா் சங்கத் தலைவா் கல்யாணசுந்தரம், செயலா் மணிகண்ட பிரபு, பொருளாளா் கிஷோா் மற்றும் சங்கத்தினா் கருப்புப் பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கோரிக்கை விளக்க துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.