உசிலையில் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

உசிலையில் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்றத் தலைவா்கள் 18 போ் பங்கேற்றனா். இதில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவா் அலெக்ஸ்பாண்டி, செயலாளா் சின்னசாமி, பொருளாளா் விமலா சுசேந்திரன், ஊராட்சி மன்ற தலைவா்கள் உக்கிரபாண்டி, அபிமன்னன், பாலமுருக மகாராஜா உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது புதிய பேக்கேஜிங் டெண்டா் முறையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதனைத்தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ஜெயராமன், பேராச்சி பிரேமா ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com