மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த காவல் சாா்பு-ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை வழங்கினாா்.
செக்கானூரணி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் எம்.பாண்டி , கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதனைத்தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் செக்கானூரணி காவல் நிலையத்தில் மறைந்த சாா்பு-ஆய்வாளா் எம்.பாண்டி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.
மேலும் அவரது குடும்பத்துக்கு அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அதிமுக கட்சி சாா்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.