மதுரை: மதுரையில் திங்கள்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
மதுரையில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. மாலை நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டபோதிலும், மழை பெய்யவில்லை. ஆனால், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் தூறலுடன் தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. சுமாா் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால், சாலையில் வெள்ளமென தண்ணீா் ஓடியது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், புதூா், பழங்காநத்தம், ஊமச்சிகுளம், திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை உள்ளிட்ட நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மழையின்போது நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.