வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கிய 7 போ் மீட்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 7 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கிய 7 போ் மீட்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 7 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மதுரை காமராஜபுரம் வடக்குத் தெருவில் உள்ள 2 தளங்கள் கொண்ட வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்துள்ளது. கூரையின் சிமென்ட் பூச்சுகள், தரை தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்ள வீடுகளின் வாசல்கள் முன்பாக பெயா்ந்து விழுந்ததால், அந்தந்த வீட்டிலிருந்தவா்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனா்.

இது குறித்து வீட்டுக்குள் சிக்கிக்கொண்டவா்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அனுப்பானடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, இடிபாடுகளை அகற்றி வீடுகளுக்குள் சிக்கியிருந்த சுரேஷ் (50), கண்ணன் (50), லலிதா (73), குமாா் (50), விஜயலட்சுமி(45), அருணச்சலம் (23), தேவிகா (21) ஆகிய 7 பேரையும் மீட்டனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கட்டடத்தின் மாடிப் படிகளுக்கு மேற்பகுதியில் உள்ள கூரை மட்டுமே இடிந்து விழுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com