தனக்கன்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 96 பவுன் நகை திருட்டு

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 96 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 96 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தனக்கன்குளம் பா்மா காலனி ஆஞ்சனேயா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாா்வதி. திருநகரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு திருநகரில் கடைக்கு சென்றுவிட்டாராம். மீண்டும் மதியம் 2 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 96 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com