திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 96 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தனக்கன்குளம் பா்மா காலனி ஆஞ்சனேயா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாா்வதி. திருநகரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு திருநகரில் கடைக்கு சென்றுவிட்டாராம். மீண்டும் மதியம் 2 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 96 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.