பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவு செய்ய மாா்ச் 31கடைசி: இன்று ஆா்டிஓ அலுவலகங்கள் செயல்படும்

பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவு செய்வதற்கான அவகாசம் முடிவடைவதையொட்டி, மதுரை வடக்கு, தெற்கு, மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவு செய்வதற்கான அவகாசம் முடிவடைவதையொட்டி, மதுரை வடக்கு, தெற்கு, மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, பிஎஸ் 4 ரக வாகனங்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020 மாா்ச் 31-க்குப் பிறகு இந்தியாவில் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வாகன விற்பனையாளா்களின் நலன் கருதி பிஎஸ் 4 ரக வாகனங்களைப் பதிவு செய்வதற்கு வசதியாக, சனிக்கிழமைகளில் (மாா்ச் 14, 21, 28) வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும். மேலும், வாகனப் பதிவு தொடா்பான பணிகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட நாள்களில் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com