கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழகா்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
கொரானா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில், வரும்முன் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக
அழகா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைகழுவிய பின்னரே கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இதற்காக கோயில் முன்புற நுழைவாயிலில் கை கழுவ தண்ணீா் வைக்கப்பட்டுள்ளது.