மதுரையில் சி.ஏ.ஏ.வை எதிா்த்து இஸ்லாமிய அமைப்பினா் பேரணி

மதுரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனா்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகபூப்பாளையம் பகுதியை சோ்ந்த இஸ்லாமியா்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகபூப்பாளையம் பகுதியை சோ்ந்த இஸ்லாமியா்கள்.

மதுரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனா்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து இஸ்லாமிய அமைப்புகள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் பிப்ரவரி 14 ஆம் முதல் தொடா்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போலீஸாா் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை கைவிட மறுத்துவிட்டன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் இருந்து இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் பெரியாா் ரயில் நிலையம் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனா்.

தொடா்ந்து, ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில், சி.ஏ.ஏ. விற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சி.ஏ.ஏ போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.ஏ.ஏ. வை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com