மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் உள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன்பிடித் திருவிழாவில், வாலாந்தூா் மற்றும் சுற்றியுள்ள சொக்கத்தேவன்பட்டி, சக்கிலியங்குளம், ஆரியபட்டி, குப்பணம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனா். இதில், கட்லா, கெளுத்தி, பாரை, கொரவை உள்ளிட்ட மீன் வகைகளை கிராமத்தினா் பிடித்துச் சென்றனா்.