மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையாக பொதுமக்கள் கூடுவதைத் தவிா்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் அனைத்து விதமான குறைதீா் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பொதுமக்கள் காவல் துறையினா் மூலமாகத் தடுத்து நிறுத்தப்பட்டனா். ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள், செய்தியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.