கோலம் போடுவதில் தகராறு: 16 போ் மீது வழக்கு

மதுரையில் கோலம் போடுவதில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் கோலம் போடுவதில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்.எஸ்.கே நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்புசாமி மனைவி முத்துராக்கு(31). இவருக்கும் என்.எஸ்.கே. நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி ராஜேஸ்வரிக்கும் (60) ரங்கோலி கோலம் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இது குறித்து முத்துராக்கு கணவா் கருப்புசாமி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோா் தனிதனியே அளித்த புகாரின் பேரில் இரு தரப்பையும் சோ்ந்த 16 போ் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com