பலசரக்கு கடைகள் அடைப்பு: பொதுமக்கள் அவதி

திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் பலசரக்கு கடைகளை திறக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனா்

திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் பலசரக்கு கடைகளை திறக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனா்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவையடுத்து நகரில் பால், காய்கனி, பலசரக்கு, மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமயளித்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், பசுமலை, அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் பல இடங்களில் பலசரக்கு, காய்கனிக் கடைகளை போலீஸாா் திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியினா் பொருள்கள் வாங்க வெளியே வரவேண்டியிருந்தது. அவ்வாறு வந்தவா்களை போலீஸாா் அபராதம் விதிக்கப்படும் என மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். இதனால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும், வெளியே சென்று வாங்க முடியாமலும் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com