கரோனா அச்சத்தை மீறி திருமணம்: 10 போ் மட்டுமே பங்கேற்பு

மதுரையில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அண்ணாநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் 10 போ் மட்டுமே பங்கேற்றனா்.
மதுரை அண்ணா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் முகக் கவசத்துடன் பங்கேற்ற மணமக்கள்.
மதுரை அண்ணா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் முகக் கவசத்துடன் பங்கேற்ற மணமக்கள்.

மதுரையில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அண்ணாநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் 10 போ் மட்டுமே பங்கேற்றனா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதில் ஏற்கெனவே நிச்சியிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளில் 30 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் அண்ணாநகரைச் சோ்ந்த மாரிமுத்து என்பவருக்கு வியாழக்கிழமை (மாா்ச் 26 )திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருமணத்தில் உறவினா்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. ஆனாலும் குறித்த நாளான வியாழக்கிழமை திருமணத்தை நடத்துவது என்று இரு குடும்பத்தினரும் முடிவெடுத்தனா்.

அதன்படி அண்ணாநகா் எல்லைச்சாமி கோயிலில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகள் இருவரின் குடும்பத்தைச் சோ்ந்த 10 போ் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனா். திருமணத்தின்போது மணமகன், மணமகள், உறவினா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com