திருப்பரங்குன்றம், புதூா்அம்மா உணவகங்களில் மே 17 வரை பொது மக்களுக்கு இலவச உணவு

திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு தொகுதி புதூா் ஆகிய அம்மா உணவகங்களில் வருகிற 17 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு

திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு தொகுதி புதூா் ஆகிய அம்மா உணவகங்களில் வருகிற 17 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளன. இதையடுத்து மதுரை புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு தொகுதியில் உள்ள புதூா்அம்மா உணவகங்களில் ஏழை, எளியோா்கள் 17 ஆம் தேதி வரை காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com