மதுரை மாவட்டத்தில் இன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடை

மதுரை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (மே 3) திறப்பதற்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தடை விதித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (மே 3) திறப்பதற்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தடை விதித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருள்கள் வாங்குகின்றனா். அதுபோன்ற கடைகளுக்கு உரிமம் ரத்துசெய்யப்பட்டு ’சீல்’ வைக்கப்படுகிறது.

கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் போதிய சமூக இடைவெளிவிட்டு அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் மீன், இறைச்சிக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com