ஆண்டிபட்டி நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி, சீனிவாசா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொது முடக்கம் காரணமாக இறைச்சிக் கடைகளை திறக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், இறைச்சிக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடா்கின்றன. இருப்பினும், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், இக்கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததுடன், முகக்கவசமும் அணிவதில்லை. இதனால், கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து சுகாதாரத் துறைக்கு பலமுறை புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சமூக இடைவெளியின்றி நோய் தொற்று பரவும் வகையில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.