தனியாா் ஆலையில் ரூ.10 லட்சம் பொருள்கள் திருட்டு

மதுரையில் தனியாா் ஆலையின் கதவை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் 6 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் தனியாா் ஆலையின் கதவை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் 6 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை விளாங்குடி பகுதியில் தனியாா் ஆலை உள்ளது. இந்த ஆலையின் ஒரு பகுதி வழக்குத் தொடா்பாக மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீஸாா் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஆலையின் கேட்டை உடைத்து, ரூ. 10 லட்சம் மதிப்பிலான கதவுகள், ஜன்னல்கள், இரும்பு கேட்கள் உள்பட பல்வேறு பொருள்களை சிலா் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனா். அதைத் தொடா்ந்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாகா் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் அடையாளம் தெரிந்த 6 போ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com