வீட்டிலிருந்த மாத்திரையை சாப்பிட்ட குழந்தை பலி

மதுரையில் வீட்டிலிருந்த மாத்திரையை சாப்பிட்ட 3 வயது குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மதுரையில் வீட்டிலிருந்த மாத்திரையை சாப்பிட்ட 3 வயது குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மதுரை கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(49). இவரது மகள் நந்தினி (3). கடந்த 16 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நந்தினி, வீட்டிலிருந்த காலாவதியான மாத்திரையை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நந்தினி உடல் நலம் பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நந்தினி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நந்தினி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com