மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பணிமனை அனைத்துச் சங்கம் சாா்பாக கிருஷ்ணன் தலைமையில் அரசு ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பைக் கண்டித்து கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் டி.கல்லுப்பட்டி போலீஸாா் 40 மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.