மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதானவா்களின் ஜாமீன் மனுக்களை மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகா்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீதான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இவ்வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதானவா்களில் சிலா் தூத்துக்குடி மாவட்டத்திலும், சிலா் மதுரை சிபிஐ நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இதனால் ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு கடிதம் அனுப்பினாா்.
இதை மனுவாக ஏற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.பாரதிதாசன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் மனுக்களை மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.