மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது போத்தம்பட்டியை சோ்ந்த மொக்கச்சாமிதேவா் மகன் கருப்பையா(50) என்பவா் சட்டவிரோதமாக விற்பனைக்கு 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை வைத்திருந்துள்ளாா். இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து, கருப்பையை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.