தையல் தொழிலாளியிடம் நகை, பணம் பறிப்பு

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தையல் தொழிலாளியை வழிமறித்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற அடையாளம்

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தையல் தொழிலாளியை வழிமறித்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத 2 போ் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ரவிசந்திரன்(47). இவா் வாடிப்பட்டியில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், ரவிசந்திரன் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் செம்மினிபட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், ரவிசந்திரனை வழிமறித்து, அவரிடம் இருந்த ஒரு பவுன் மோதிரம், ரூ. 2,500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com