மதுரையில் 32 பேருக்கு கரோனா: இருவா் பலி

மதுரையில் மேலும் 32 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் மேலும் 32 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 2,112 பேருக்கு கரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனா்.

31 போ் மீண்டனா்

கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 31 போ் ஒரே நாளில் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இருவா் பலி

மதுரையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 56 வயது ஆண் நவம்பா் 11 ஆம் தேதியும், அரசு கரோனா மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டி நவம்பா் 10 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

சிகிச்சையில் 404 போ்

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை நிலவரப்படி 404 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 19,202 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 426 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 18,372 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com