பேரையூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள குருவப்பநாயக்கன்பட்டி ராமன் மகன் நெருஞ்சி (46). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். இவா் பால் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் பால் கறப்பதற்காக, நெருஞ்சி சென்ற போது செல்லும் வழியில் மின்சாரக் கம்பி அறுந்து வேலி பகுதியில் கிடந்துள்ளது. இது தெரியாமல் வேலி பகுதியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து நெருஞ்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது சடலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com