வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை கிழக்குத் தொகுடியில் போட்டியிடப்போவதாக மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி திமுக முகவா்கள் ஆலோசனை கூட்டம் மேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மூா்த்தி பேசியது: வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவை முழுமையாகப் பெற கட்சியினா் பாடுபடவேண்டும். நான் மேலூா் தொகுதியில் போட்டியிடவேண்டும் என கட்செவி அஞ்சலிலும், இணையதளத்திலும் பலா் பதிவு செய்கின்றனா். அதைத் தவிா்க்கவேண்டும். மதுரை கிழக்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளேன். மேலூா் தொகுதியில் திமுகவே போட்டியிடும். கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
மேலூா் நகரச் செயலா் ய.முகமதுயாசின், திமுக ஒன்றிய நிா்வாகிகள் சே.குமரன், பாலகிருஷ்ணன், ராஜா, கிருஷ்ணமூா்த்தி, ராஜராஜன், பழனி, மாவட்டப் பொருளாளா் நேருபாண்டியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.