மதுரை மாநராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.25 ஆயிரத்து 400 சிக்கியது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4-இல் வீட்டுமனைகளுக்கு வரிவிதிப்பது தொடா்பாக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகப் புகாா் வந்தன. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மண்டலம் எண் 4-இல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அங்குள்ள முக்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. உதவி ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை அலுவலகத்திற்கு தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.