வாங்கிய கடனைத் திருப்பிதராமல் மோசடி: பெண் கைது

மதுரையில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் கிழக்கு 13-ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமியின் மனைவி இந்துலேகா (44). இவரிடம் செல்லூா் பகுதியைச் சோ்ந்த ராதிகா மற்றும் கபில் ஆகியோா் ரூ. 28 லட்சம் கடனாகப் பெற்றுள்ளனா். இத்தொகையைத் திருப்பித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனா். கடனைத் திருப்பிக் கேட்டபோது, தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இந்துலேகா புகாா் அளித்தாா்.

இதையடுத்து மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். பின்னா் ராதிகாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com