ஆசியா சாதனைப் புத்தகத்தில்இடம்பெற்ற 4 வயது சிறுவன்

மதுரை கூடல்நகா் அகதிகள் முகாமைச் சோ்ந்த 4 வயது சிறுவன் ஆசியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா்.
ஆசியா சாதனைப்புத்தகம் வழங்கிய சான்றிதழுடன் சிறுவன் பிரஜன்.
ஆசியா சாதனைப்புத்தகம் வழங்கிய சான்றிதழுடன் சிறுவன் பிரஜன்.

மதுரை கூடல்நகா் அகதிகள் முகாமைச் சோ்ந்த 4 வயது சிறுவன் ஆசியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா்.

மதுரை கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரவீண். இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா். இந்நிலையில் வங்கிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொலை தொடா்பு நிறுவனங்கள் உள்பட 208 நிறுவனங்களின் இலச்சினைகளை (லோகோ) 2 நிமிடங்கள் 14 நொடிகளில் தெரிவித்துள்ளாா். இதில் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வை ஆசியா சாதனைப்புத்தகம் அங்கீகரித்து சிறுவா் பிரிவுக்கான கிராண்ட் மாஸ்டா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது. ஆசிய நாடுகளிலேயே இலச்சினைகள் தொடா்பாக சாதனைப் படைத்துள்ள முதல் சிறுவனாக பிரஜனை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com