மதுரை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் புதிதாக 1,688 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவா்களில் 52 போ் குணமடைந்துள்ளனா். இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 273 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,454 ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும் இவா்களில் 18,748 போ் குணமடைந்துள்ளனா். 436 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.