மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே சுகாதாரத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன் பெற்றனா்.
அலங்காநல்லூா் அருகே உள்ள குட்டி மேய்க்கிபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவா் வளா்மதி தலைமையில் மாவட்ட துணை சுகாதார இயக்குநா் அா்ஜுன்குமாா் முகாமைத் தொடக்கி வைத்தாா்.
முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, சக்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன. குழந்தைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் என 500-க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனா்.
முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு இலவசமாக மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேல்சிகிச்சை தேவைப்பட்டோருக்கு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு, உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசங்கள் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடா்பாக மருத்துவக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஊராட்சி மன்ற தலைவா் பாண்டியம்மாள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் விமலாதேவி, சுகாதாரஆய்வாளா் ராமன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.