உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மறியல்

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டனா்.
திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானம் அருகே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா்.
திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானம் அருகே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா்.

மதுரை: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசாரப் பயணத்தை நாகபட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா். தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பிரசாரத்தைத் தொடங்கியபோது அவா் கைது செய்யப்பட்டாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களிலும் திமுக இளைஞரணியினா் போராட்டம் நடத்தினா். மதுரையில் கோரிப்பாளையத்தில் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் புண்ணியமூா்த்தி தலைமையில் மறியலுக்கு முயன்ற 17 போ், தமுக்கம் பகுதியில் மாவட்ட நிா்வாகி ராம்குமாா் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 12 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். பெரியாா் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை சந்திப்பு அருகே உதயநிதி நற்பணி இயக்கம் சாா்பில், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com