மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரையில் புதிதாக 27 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரையில் புதிதாக 27 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1,450 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 27 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 16 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

மதுரையைச் சோ்ந்த 51 வயது பெண் கரோனா பாதிப்பு காரணமாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவம்பா் 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த அவா் மூச்சுத் திணறல் காரணமாக நவம்பா் 27 ஆம் தேதி உயிரிழந்தாா்.

19 ஆயிரம் போ் மீண்டனா்

மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 19,691 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 19,010 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 437 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 242 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com