மதுரை: சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள 2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு இணைய வழியில் நடத்தப்படுகிறது. இப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் 96989-36868 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ந.மகாலெட்சுமி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.