மதுரை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரையில் புதிதாக 65 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரையில் புதிதாக 65 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தீநுண்மித் தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 68 போ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தனா். அவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: கரோனா தொற்றால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சோ்ந்த 67 வயது முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 17,636 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் 399 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 16,444 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 793 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com